திங்கள், 9 ஜூன், 2014

குந்தவை ராஜ்ஜியம் 6

குந்தவை ராஜ்ஜியம் 6


சிறு வயதில் சிதம்பரத்தில் தில்லை நடராஜர் முன் நாட்டியம் அடி வந்த பஞ்சவன் மகாதேவியின் நாட்டியத்திலும், அவள் அழகிலும், என் அவள் அழகில் மயங்கிய ராஜராஜ சோழன், தாசியாக இருந்த அவளை துணைவியாக்கி கொண்டான். மணைவியாக மட்டும் அல்லாமல் ராஜராஜனுக்கு ராஜதந்திரியாகவும் விளங்கினாள்,
தன் கணவரின் முதல் தாரத்து மகனான ராஜேந்திர சோழனை தன் ஒரே மகனாக பாவித்தால், கடைசி வரை தன் வயிற்றில் கருவை சுமக்க அனுமதிக்கவில்லை, ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கா வாழ்ந்தவள்,
ராஜேந்திர சோழன் தன் தாய்க்கு கூட கோயில் கட்டவில்லை, தன்னை வளர்த்த தாய் பஞ்சவன்மகாதேவி மட்டும் கோயில் எழுப்பினார் என்பது வரலாறு.
ராஜேந்திர சோழனை புகழ் பெற்ற மன்னாக்க காரணமான இரு பெண்களில் பஞ்சவன்மகாதேவியும் ஒருவர்.

பட்டாடை உடுத்தி ராஜராஜ சோழனோடு சேர்ந்து கம்பிரமாக சோழ தேசத்தை ஆட்சி செய்தவள், இன்று வெண்நிற ஆடை உடுத்தியும், குங்குமம் இட்ட நெற்றியில் விபூதி பூசியவளாக இறைவன் திருவடியில் சேவை செய்து பக்தி பழமாக மாறிவிட்டாள்.
காஞ்சி அரண்மனை தோட்டதில் இருக்கும் சிறிய சிவன் கோயில் கருவறை வாசலில் அமர்ந்து திருநாவுகரசர் இயற்றிய வெண்பா ஒலை சுவடியை மெய்மறந்து பாடி கொண்டு இருந்தார்.

படை தளபதி பழனிவேல் மாறனின் மகன் மணிமாறன் சிவகந்தன் வந்த தகவலை மகாதேவி பஞ்சவன்மகாதேவி சொல்வதற்காக காத்து இருந்தான்.
இறைவனின் புகழ்பாடல்களை லயத்து பாடி கொண்டு இருந்தவள், மணிமாறன் கைகட்டு எதோ செய்தி சொல்ல வந்து இருக்கிறான் என்பதை யூகித்தவள், பாடல்களை பாடுவதை நிறுத்திவிட்டு அவனை தன் அருகில் வரும் படி கைகளை ஆசைத்து அருகில் வரும்படி சைகை செய்தாள், அருகில் வந்து சிவகந்தன் வந்து இருக்கும் தகவலையும், வந்த காரணத்தையும், தங்கள் சந்திக்க அனுமதிக்கா சிவகந்தன் காத்து இருப்பதையும் கூறினான்.

*எனக்கு தோன்றாத இவ்விடயம் குந்தவைக்கு மற்றும் தோன்றியது எப்படி? என் இருந்தாலும் தாயான என்னை விட, அத்தையான குந்தவைக்கே ராஜேந்திர சோழனின் மீது எவ்வளவு அக்கறை, என்ன இருந்தாலும் குந்தவை, குந்தவை தான்,* என்ற எண்ணியவாறே, பணியாளை அழைத்து ஒலைச்சுவடி தயார் செய்யும் படி உத்திரவிட்டாள்.
"மணிமாறா! சிவகந்தன் இப்பொழுது எங்கே இருக்கிறார்?"
"தாயே, அவர் வடக்ககே உள்ள விருந்தினர்கள் இருக்கும் மாடமாளிகையில் இருக்கிறார், தங்கள் அனுமதிக்கா காத்து இருக்கிறார், தங்களை அவர் எப்போது காண வரலாம் தாயே?"
"இப்பொழுதே சிவகந்தனை காண நானே வருகிறேன்,"

"தாயே தாங்கள் எப்படி? நீங்கள் வர வேண்டிய அவசியம் இல்லை தாயே, சிவகந்தன் அய்யனை வர சொல்லுகிறேன் தாயே."
"இல்லை மகனே, இல்லை, இந்த உயிர் சோழ தேசத்தின் நலனுக்காகவும், என் மகன் ராஜேந்திர சோழனுக்காக தான், என் உயிர் இந்த உடலில் தங்கி இருக்கிறது, அன்றே என் மணவாளன் ராஜராஜ சோழன் இறந்த அன்றே, அவருடன் மற்ற மனைவிமார்கள் போல ஆக்னியில் பிரவேசித்து இருப்பேன், என் அக்கா உலகமாகதேவியின் கட்டளைக்காக தான் இந்த உயிர் இன்னும் இந்த உடலில் தங்கி இருக்கிறது. என் மகன் நலனுக்கா வந்து இருக்கும் சிவகந்தனை நானே போய் சந்திப்பது தான் நல்லது" என்று கூறி தான் பயணிக்கும் பல்லக்கை நோக்கி விரைந்தாள். அவளை பின் தொடர்ந்தான் மணிமாறன்.


to be continued....

update now sixth version..

3 கருத்துகள்: