ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 1

குந்தவை ராஜ்ஜியம்.1.

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
மேல,இதை படித்த பின் கதைக்கு செல்வும்.....


எத்தனையோ பயணங்களை பயணித்து இருப்போம் நண்பர்களே, காலத்தை பின்நோக்கி செல்லும் டைம்மிசின் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தை நோக்கி நாம் பயணிப்போம், குந்தவை ராஜ்ஜியம் என்ற நாவல் முலம் பயணிப்போம், வாருங்கள் நண்பர்களே,
time machine
உலகில் பழமையான மொழியான தமிழ் மொழி, ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்திய தேசம் மட்டும் அல்லாமல் கிழக்கு ஆசியா முழுவது தமிழ் ஆட்சிக்கு கீழ் இருந்த கால கட்டத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே. இன்றில்(கிபி2014) இருந்து சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன் (கிபி1014)ல் தான் தமிழ் தேசம் மிகப்பெரிய கால மாற்றத்தை சந்தித்தது, ராஜராஜசோழன் மறைவுக்கு பிறகு ராஜேந்திர சோழன் அரியனை ஏறிய காலம், ஆனால் நாம் செல்லும் காலம் கிபி1020ல், சரியாக 994 வருடங்கள் பின்னோக்கி செல்லுவோம். குடந்தையில் இருந்து மாமல்லிபுரம் செல்லும் காஞ்சி மணற்சாலையில் புயல் வேகத்தில் வெண் புரவியைகுதிரை விரட்டி சென்றான் சிவகந்தன், சோழ தேசத்தில் காற்றை விட வேகமாக புரவியை செலுத்துவதில் சக்கிரவர்தியாக திகழ்ந்தான் என்று சோழ தேசமே செல்லும். வெண்நிற தோற்றத்தில் கம்பிரமான உடல் தேகமும், பார்ப்பவர்கள் இவரது அகவை நாற்பதிஆறு என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள், சிவப்பு நிற பட்டுவேட்டியும், இடுப்பில் பளபளப்பான வெள்ளி நிற உடைவாளும், அதன் அருகில் அரசரின் ஒலைசுவடியும், கழுத்தில் பெரிய சங்கலியும், கையில் மன்னரின் முத்திரை மோதிரமும். சிவப்பு நிற தலைப்பாவில் நடுவில் தங்கத்திலான புலியின் சின்னமும், இவரது உடையும், நடையும் பார்ப்பவர்களுக்கு இவர் தூதவர் என்றால் யாரும் நம்ம மாட்டார்கள். ஆனால் இன்று இரண்டாம் முறையாக சோழ மக்களின் நாயகனாக திகழ்ந்த வல்லவராயன் வந்திய தேவனிடம் இருந்து தூது செய்தியை மாமன்னர் ராஜேந்திரனிடம் கொண்டு செல்ல மலைகளின் தீவான மலேயா என்று அன்று அழைக்கப்பட்ட மலேசியா தீவை நோக்கி பயணிக்க மாமல்லிபுரத்தில் புறப்பட தயராக இருக்கும் சீனா செல்லும் சோழர்கள் கப்பலை பிடிக்க தான் வேகமாக புரவியை செலுத்துகிறான்.

சிவகந்தன் தூதவன், சோழ தேசத்து குலவிளக்கான குந்தவையின் ஆஸ்தான குடந்தை ஜோதிடர் சண்முக அய்யங்காரின் ஒரே மகனும், சோழ தேசத்து மக்களின் குலவிளக்கான குந்தவை பிராட்டியின் வளர்ப்பு கண்காணிக்கப்பட்டவர் தான் சிவகந்தன். தொடர்ந்து ஜந்து மணி நேரம் புரவியை செலுத்திய களைப்பால், புரவியின் வேகம் சுற்று குறைந்து கொண்டே வந்தது. தாகமும், பசியும் கண்களை சொக்கியது சிவகந்தனுக்கு, தூரத்தில் கோட்டையின் உச்சியில் இருக்கும் புலி கொடியை கண்டுவிட்ட சிவகந்தன். இன்னும் ஏழு கல் தொலைவு தான் இருக்கும் காஞ்சியை சென்று அடைய, என்று சொல்லிகொண்டே மீண்டும் தன் புரவியை காஞ்சியை நோக்கி செலுத்தினான்.
இன்னும் ஏழு (நாள்)கல்(ள்) தான். சிவகந்தனின் தூது கடல் கடந்த பயணம் தொடரும்...

இதன் இரண்டாம் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக