திங்கள், 28 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 3

குந்தவை ராஜ்ஜியம் 3


இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

புரவியில் வருபவரை தொலைநோக்கியில் மூலம் அறிந்த மணிமாறன், அவரை வரவேற்கக கோட்டை வாயிலை நோக்கி விரைந்தை கண்ட புகழேந்தி,

"புரவியில் வருபவர் யார் மணிமாறா?"

"புயல் காற்றை போன்று வேகமாக புரவியில் வருபவரை அறியவில்லையா நீ?, வருபவர் வல்லவராய வந்திய தேவனின் அஸ்தான தளபதி சிவகந்தன் வருகிறார், நான் அவரை வரவேற்க்க கோட்டை வாயிலை தயார்படுத்திகறேன், நீ என் தந்தை அழைத்து வா  கோட்டை வாயிலுக்கு, சீக்கிரமா கிளம்பு புகழ்,"

கோட்டையை நோக்கி வேகமாக சிவகந்தன் விரைந்தான், அவனை வரவேற்க்க கோட்டை வாயிலில் வீரர்களும் இருபுறமும் அணிவகுத்து நிற்பதையும், அவர்களை தலைமை தாங்கும் விதமாக காஞ்சி படை தளபதி பழனிவேல் ராஜன் கம்பிரமாக நிற்பதை கண்டான் சிவகந்தன்.  கோட்டை வாயிலை நோக்கி தன் வெண்புரவியை செலுத்தினான் சிவகந்தன்.

வேகமாக செலுத்திய புரவியை  காஞ்சி படைதளபதி பழனிவேல் ராஜன் முன் தன் புரவியின் கடிவாளத்தை இழுக்க, அந்த அழகான வெண் புரவி, தன் இரு முன்னங் கால்களையும் வான் நோக்கி  சில நோடிகள் உதைத்து விட்டு பூமியை நோக்கி தன் கால் பதித்தது,

சிவகந்தனை வரவேற்கும் வகையில், இரு அணியாக நின்று கொண்டு இருந்த சோழ வீரர்கள், தங்கள் கேடயத்தையும்,  வேலையும் ஒங்கி தட்டி அதன் முலம் வந்த பலமான ஒசையை தாளமாக மாற்றி "சோழம், சோழம், சோழம்," என மூன்று முறை கூவி, உற்சாகமாக வரவேற்றனர்.

சோழ வீரர்களின் வரவேற்பை ஏற்று கொண்ட வகையில் தன் வலது கைகளை உயர்த்தி, தன் மார்பில் வைத்து சைகையால் அவர்கள் வரவேற்பை ஏற்று கொண்டதாக காட்டிவிட்டது, புரவிக்கு விட்டு ஒரே பாய்ச்சலாக கீழே குதித்து கீழே இறங்கினான்.

தன் முன் நின்ற சிவகந்தன் கரங்களை பற்றி, "மக்களின் வேந்தனாக இருக்கும் வந்தியதேவரின் நம்பிக்கை பாத்திரமானவரே, தங்கள் வருகை நல்வரவாகட்டும், அங்கு வந்திய தேவரும், எங்கள் தாய் குந்தவைபிராட்டியும் நலமா?"

"நீங்களே அறிந்தீர்பீர்களே பழனிவேல் ராஜன் அவர்களே, எனது தாய் ஆறு மாதங்களாக உடல் நலம் இன்றி தவிக்கிறார்கள், தற்பொழுது அவர்கள் உடல் நிலை..." என்று சொல்லி முடிப்பதற்குள் வார்த்தைகள் உடைந்து கண்களின் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது.
புன்கை தவிழும் முகத்தையும், கோபத்தையும் மட்டும் வெளிகாட்டி வந்த சிவகந்தனின் முகம், இன்று குழந்தை போல் கேவி கேவி அழுவதை கண்டு, ஒரு கணம் பழனிவேல் ராஜன் அரண்டு தான் போனார்.

"மண்ணித்து விடுங்கள் அய்யனே, தங்களுக்கு மட்டும் அல்ல,  சோழ தேசம் நமது குலதெய்வம் குந்தைவைபிராட்டியை உடல் நிலையை நினைத்து தான் கவலைபடுகிறது, அய்யா தங்கள் வருகையின் நோக்கத்தை அறிந்துகொள்ளலாமா?"

தன் கண்களின் இருந்து வரும் கண்ணீரை துடைத்து கொண்டு, "எனது தந்தை நமது மன்னர் ராஜேந்திர சோழரிடம் முக்கிய தகவலை சொல்லுவதற்காக என்னை அனுப்பி இருக்கிறார், நாளை மறுநாள் சீன தேசத்தை நோக்கி செல்லும் நமது வணிக கப்பலில் பயணித்து மலேயா தீவில் இருக்கும் இராஜேந்திர சோழரை சந்திக்க செல்லுகிறேன். என் பிராயனத்தை  தயார்படுத்தி கொள்ளவதற்காக இங்கு வந்துள்ளேன், அது மட்டும் அல்ல, உங்களிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வந்துள்ளேன்."

இதை கேட்ட மணிமாறன், முளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அரம்பித்து, எப்படியாவது சிவகந்தன் முலமாக மலேயா(மலேசியா) தீவில் இருக்கும் சோழ படைகளுடன் இனைந்துகொள்ளும் வாய்பை நழுவ விடக்கூடாது என திட்டம் தீட்டிக் கொண்டான்.

"தங்கள் பிராயான களைப்பில் இருப்பீர்கள், வெயிலின் உஷ்னம் வேற அனலாக இருக்கிறது, தங்கள் தனிக்க மோர் அருந்துங்கள், உங்களுக்கு மதிய விருந்தை எனது வீட்டில் தயார்படுத்த சொல்லிவிட்டேன், தங்களுக்கு பிடித்த அசைவ விருந்தை ஏற்பாடு செய்ய சொல்லிவிட்டேன்."

சிவகந்தன் முன் பணிவுடன் மண் சட்டி நிறைய வெண் நிற பசு மோரை நீட்டிய மணிமாறனிடம் வாங்கி ஒரு மூச்சியில் முழுமையாக குடித்துவிட்டான், தன் தாகம் தனிந்த பின்.

"பழனிமாறன் அவர்களே என்னை மண்ணிக்க வேண்டுகிறேன், கடந்த அறு மாதங்களாக நான் ஆசைவ உணவுகளை உண்ணுவது இல்லை, தங்கள் விருந்தை என்னால் ஏற்று கொள்ள இயலாது, தங்கள் சாதராண உணவை ஏற்பாடு செய்யுங்கள்."

"அப்படியே ஆகத்தும், வருங்கள் அய்யனே, கோட்டைக்குள் செல்வோம், தங்கள் களைப்பு தீர சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொள்ங்கள், உங்கள் பயணம் லேசாக இருக்க உதவும்."

"ஆம், நீங்கள் சொல்வது சரி தான், என் புரவியும் களைப்பு தீரவேண்டும், அதற்கு தேவையான ஆகாரத்தை வழங்க ஏற்பாடு செய்யுங்கள், நாம் கோட்டைக்கு செல்வோம்"

கோட்டைக்குள் சிவகந்தன் நுழைந்த பொழுது கோட்டை மத்தியில் இருக்கும் ஆத்திய கரிகாலன்(அதித்தய கரிகாலன் சுந்திர சோழனின் முத்த மகன், இளவரசி குந்தவைபிராட்டிக்கும், ராஜராஜ சோழனுக்கும் அண்ணன் ஆவர், பாண்டிய அபத்துவிகளால் இளம் வயதிலே கொல்லப்பட்டார்.) கட்டிய பொன் அரண்மனைய சூரிய ஒளி பட்டு கண்களை கூசும் ஒளி சிவகந்தன் கண்களை தாக்கியது,
பொன்னியன் செல்வன் நாவலில் மணியன்  அதித்தய கரிகாலன் ஓவியம்..

இதைகண்ட பழனிவேல் ராஜன்,"என் அய்யனே. பார்த்தீரா, நமது மாமன்னர் ராஜேந்திர சோழர் நாடு திரும்பிய பின்பு இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், தனது பெரிய தந்தை ஆத்திய கரிகாலன் ஆசையாக கட்டி வாழ்ந்த  இக்கோட்டையில் தான் வசிக்க போகிறார், இராஜேந்திர சோழன் அப்படிய அத்திய கரிகாலனின் மறுபிறவி என்றே கூறலாம், அவரிடம் இராஜராஜ சோழன் குணங்களை காணவே முடியாது." என்று பெருமையாக பழனிவேல் ராஜன் கூறி கர்வத்துடன் சிரித்தார்.

"ஹும்ம்ம், அத்திய கரிகாலன் கட்டிய அரண்மனைக்கும் தற்போதைய அரண்மனைக்கு பல மாற்றங்கள் இருக்கிறதே,  கோபுரங்கள் அழகாக வடிவமைக்கப்படுள்ளதே, இதை யார் புதுப்பித்தார்கள்?".


"வடிவமைத்தது வேறு யாரும் இல்லை, குச்சரமல்லரிடம் வலது கரமாக திகழந்த எழில்அரசன் தான். இதை வடிவமைத்தார்."
(உலகம் போற்றும் தச்சை பெரிய கோயிலை வடிவமைத்து கட்டியவர் தான்.  குச்சரமல்லர் என்பதை வாசகர்கள் அறிந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..)

"சரி, எழில்ரசனை அழைத்து வாருங்கள், உங்கள் இருவருக்கும் என் தாய் குந்தைவைபிராட்டியிடம் இருந்து முக்கிய செய்தி கொண்டு வந்துள்ளேன். உங்கள் இருவரிடம் அத்தகவலை தெரிவிக்கவே, என் தொலைதூர பிராயாணத்தை பொருட்படுத்தாமல் இங்கு வந்தேன்."

பழனிவேல் ராஜனுக்கு சிறிய அதிர்ச்சி, சிவகந்தன் வரும் பொழுதே தமக்கு ஒரு செய்தி இருப்பதை தெரிவித்தும், அதை பொருட்படுத்தாமல் அவரை வரவேற்பதில் அவர் சொல்லவந்ததை செவி வழியில் கேட்காமல் விட்டதை என்னிய அதிர்ச்சியை வெளிகாட்டாமல், மணிமாறனிடம்,"சீக்கிரம் அழைத்து வா, தலைமை சிற்பி எழில்ரசனை பணிவுடன் அழைத்துவா, குந்தவைபிராட்டியிடம் இருந்து செய்தி வந்து இருப்பதை தெரிவித்து அழைத்துவா, சீக்கிரம்."
மணிமாறன் வேகமாக தலைமை சீற்பி இருக்கும் மாடமாளிகைக்கு விரைந்தான்.

[குந்தவைபிராட்டியிடம் இருந்து வந்திருக்கும் தகவல் கேட்டால் பழனிவேல் ராஜனும், எழில் அரசனும் அதிர்ச்சி அடைய போகிறார்கள், அப்படி என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார் சிவகந்தன், என்பதை ஏழு நாள் வரை காத்திருங்கள்.]

பயணம் தொடரும்...

திங்கள், 21 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 2

குந்தவை ராஜ்ஜியம் 2



இதன் முதல் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

குடந்தையில் இருந்து நள்ளிரவில் இருந்து பயணத்தை தொடங்கிய சிவகந்தன், சுட்டு எரிக்கும் சூரியனின் உச்சியில் நிற்க பசி தாகத்தில் இருந்த சிவகந்தனுக்கு காஞ்சி கோட்டையில் உச்சியில் இருந்த புலி கொடியை கண்டதும் காஞ்சியை நோக்கி தன் புரவி(குதிரை)யை செலுத்த அரம்பித்துவிட்டான்.


"அதோ காஞ்சியின் கோட்டை, இங்கு ஒய்வு எடுத்துவிட்டு கடல் பயணத்திற்கு தேவையான பொருள்களை பெற்றுவிட்டு மாமல்லிபுரத்திற்கு  செல்வோம், இன்னும் இரண்டு திங்கள்(நாள்) தான் இருக்கிறது. மாமல்லிபுரத்தில்  இருந்து மலேயா(தற்போதைய) தீவிற்கு சோழ தேசத்து போர் கப்பலை பிடிக்க." என மனதில் சிந்தித்துகொண்டே தன் புரவியை செலுத்த அரம்பித்தான் சிவ கந்தன்.

[காஞ்சி நகரம் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரில் தான் சீனா சென்று சீனர்களின் மனதை வென்ற அவர்களின் இதயத்தில் கூடி இருக்கும் பல்லவ இளவரசர் போதி தர்மர் பிறந்தார்,

பல்லவர்களால் காஞ்சி நகரம் சிற்ப கலை சிறந்து விளங்கிய இந்த நகரம். இன்று சோழ தேசத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிவிட்டது.]

காஞ்சி நகரத்தின் கோட்டை வாசலில் உள்ள பார்வை கோபுரத்தில் இரு இளைஞர்கள் நின்று கொண்டு காவல் காத்து கொண்டு இருந்தனர்.

மலயுத்த வீரர்களை போன்று வலிமையான தேகத்துடன் அந்த இளம் இளைஞனுக்கு தற்போது தான் சிறியதாக அரும்பு மீசை முளைத்து இருந்து, காஞ்சி தேசத்து உப.சோனாதிபதி பழனிவேல் ராஜனின் மகன் தான் அந்த மணிமாறன்.

ஏதையே சிந்தித்தாவறே சோகமாக இருந்த மணிமாறனை பார்த்து அவனுடன் கோட்டை பாதுகாப்பில் இருந்த புகழேந்தி,
மணிமாறனை பார்த்து,
"என்ன மணி, ஏதையோ சிந்தித்து கொண்டு இருப்பது போல தெரிகிறது, உன் முகத்தில் பழைய பொலிவே இல்லையே, என் உடம்பு எதும் சரியில்லையா?"

"என் உடம்பு திடமாக வலிமையாக தானே இருக்கிறது புகழ், என் கவலை எல்லாம் மலேயா தீவில் இருக்கும் நம் சோழ தேசத்து வீரர்களை பற்றி தான்."

"ஹா ஹா ஹா" என பலமாக சிரித்த புகழ் " உன் பதில் என் வயிற்றை புண்ணாக்கிறது, நம் மன்னரும், நம் படையும் சாதராண படையா? இவ்வுலகத்தையே வெல்லும் அற்றல் நம் மன்னர் ராஜேந்திரனுக்கு இருக்கிறதை அறியவில்லை,"

"அய்யகோ, நான் அப்படி சொல்லவில்லை, நம் மன்னரும் நம் நாட்டு வீரர்களின் வீரமும் பற்றி பேசி கொண்டே இருக்கலாம், நம் மன்னர் இமயத்தில் இருந்து வரும் கங்கை நதி பாயும் வங்கம் வரை ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய மாவீரர் அல்லவா அவர்?"

"அப்ப என் சோகமா இருக்கிறாய் மணி"

"மலேயா தீவில் இருக்கும் நம் படையை நினைத்து தான்......" என்று மணிமாறன் வார்த்தையை முடிப்பதற்கு முன் புகழேந்தி கத்த அரம்பித்துவிட்டான்.

"மணி உனக்கு தான் நன்கு தெரியுமே நம் பரதர்களின் வலிமையை பற்றி, அங்கு தான் பாலகன் பருவத்தில் வளர்ந்தாய், மீன் பிடிப்பதை மறந்து வாள் பிடிக்க கற்று கொடுத்தவர் தானே, நம் மன்னர், வலிமையான ஈழத்தையும், கடாரத்தையும் வென்று விட்டார், சிறிய மலை தீவான மலேயா(சிங்கப்பூர் &மலேசியா) இன்னும் சில திங்களில்(நாளில்) சோழதேசத்துடன் இனைந்துவிடும், உனக்கு என்ன கவலை?."

அதுவரை அமைதியாக இருந்த மணிமாறனை, புகழேந்தியின் மீது தன் கோபத்தை வெளிகாட்டினார்.
"என்னை பேசவிடாமல், நீயே உன் கற்பனையில் நினைப்பதை பேசினால் என்ன அர்த்தம்?, என் சோகம் அது அல்ல, நான் நினைத்து என்னை பற்றி, உனக்கு ஒன்று தெரியுமா??. நம் மன்னர் ராஜேந்திரனுக்கு முன்பே,  மறைந்த நம்முடைய மாமன்னர் ராஜராஜசோழன் அருள் மொழிவர்மர் அவர்களே அன்றே செய்த ஏற்பாடால் தான். இன்று நம்முடைய மாமன்னர் ராஜேந்திரன் சோழனால் எளிதாக பல தேசங்களை வெல்ல முடிந்தது, மீன் பிடிக்கும் பரதர்களுக்கு வாளும், வேலும் பயிற்ச்சியை அன்றே அளித்துவிட்டார், பரதர்களுடன் சிறுவயதிலே வளர்ந்தது மட்டும் அல்ல, அவர்களுடன் சேர்ந்து எடுத்த பயிற்ச்சியின் விளைவு தான் என் வலிமையான தேகம் உருவாக காரணம்."

"சரி உன் கவலை தான் என்ன மணிமாறா? உன்னை பற்றி என்று சொன்னாயே, அப்படி என் கவலை?"
"புகழ், நீ நன்கு அறிவாய், நான் உருவாக்கிய வலிமையான தேகம், போர்களத்தில் எதிரிகளின் தலையை சாய்க்கவே, ஆனால் எனக்கு இன்னும் பதினேட்டு அகவை பூர்த்தியாகவில்லை என்ற காரணத்தால், என் தந்தை என் போர்களத்தில் அனுமதிக்கவில்லை, நம் மன்னரே இன்னும் இரண்டு வருடங்களில் கீழ்தேசத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் கைபற்றி நாடு திரும்பி ஆட்சி பொறுப்பில் ஈடுபட அரம்பித்துவிடுவார். அப்படி என்றால், தற்பொது மலேயா தீவில் இருக்கும் நம் படையுடன் நான் தற்போது இனைந்தால் மட்டுமே, என்னால் போர்களத்தில் ஈடுபட்டு எதிரிகளின் குருதி(இரத்தம்) சிந்த வைக்க முடியும், நான் எப்படி நம் மன்னர் படையுடன் இனைவது எப்படி கடல் கடந்து இருக்கும் அந்த தீவிற்கு செல்வது, என் தந்தையுடன் எப்படி சம்பந்தம் வாங்குவது என பல கவலைகளால் தான், நான் வாடி இருக்கிறேன் நண்பா,"


"கவலைபடாதே மணிமாறா!, உன் கவலையை போக்க ஆண்டவனே ஆள் அனுப்பாவார், உன் ஆசை நிறைவேறா."

"அப்படி நடந்தால், மகிழ்ச்சி, என் அவலும் லச்சியமும் அது தான் புகழ்."

புகழேந்தி மாலுமிகள் பயண்படுத்தும் தொலைநோக்கி முலம் தூரத்தில் இருந்து யாராவது வருகிறார்களா என கண்காணித்தான். அந்த நேரத்தில்.

"மணி மாறா, அங்கே பார், புழுதி புயல் உருவாக்கி கொண்டு வேகமாக ஒரு புரவி வருவதை பார், வருபவர் யார் என்று தெரிகிறதா உனக்கு?"

மணிமாறன் தொலைநோக்கியை வாங்கி தூரத்தில் வருபவரை நோக்கி பார்வையை செலுத்தியவன் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, பகலவனை கண்டு பூக்கள் மலர்வது போல மலர அரம்பித்துவிட்டது மணிமாறன் முகம்,

"புகழ், என் லஞ்சியம் வீண் போகவில்லை, என் ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கபோகிறது. அதே அந்த புரவியில் வருபவர் மூலமாய்" என்று சொல்லிக்கொண்டே பார்வை கோபுரத்தை விட்டு கீழே இறங்கி கோட்டை வாயில் நோக்கி விரைந்தான் மணிமாறன்.

[மணிமாறன் ஆசை நிறைவேறியதா இல்லையா?. புரவியில் வந்தவர் நிறைவேற்றுவார இல்லையா? என்பதை ஏழு திங்கள் வரை காத்திருங்கள்.,]

குந்தவை ராஜ்ஜியம் 3


ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 1

குந்தவை ராஜ்ஜியம்.1.

குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
குந்தவை ராஜ்ஜியம் நாவலை பற்றிய விளக்கம்...
மேல,இதை படித்த பின் கதைக்கு செல்வும்.....


எத்தனையோ பயணங்களை பயணித்து இருப்போம் நண்பர்களே, காலத்தை பின்நோக்கி செல்லும் டைம்மிசின் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தை நோக்கி நாம் பயணிப்போம், குந்தவை ராஜ்ஜியம் என்ற நாவல் முலம் பயணிப்போம், வாருங்கள் நண்பர்களே,
time machine
உலகில் பழமையான மொழியான தமிழ் மொழி, ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்திய தேசம் மட்டும் அல்லாமல் கிழக்கு ஆசியா முழுவது தமிழ் ஆட்சிக்கு கீழ் இருந்த கால கட்டத்தை நோக்கி பயணிப்போம் வாருங்கள் நண்பர்களே. இன்றில்(கிபி2014) இருந்து சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன் (கிபி1014)ல் தான் தமிழ் தேசம் மிகப்பெரிய கால மாற்றத்தை சந்தித்தது, ராஜராஜசோழன் மறைவுக்கு பிறகு ராஜேந்திர சோழன் அரியனை ஏறிய காலம், ஆனால் நாம் செல்லும் காலம் கிபி1020ல், சரியாக 994 வருடங்கள் பின்னோக்கி செல்லுவோம். குடந்தையில் இருந்து மாமல்லிபுரம் செல்லும் காஞ்சி மணற்சாலையில் புயல் வேகத்தில் வெண் புரவியைகுதிரை விரட்டி சென்றான் சிவகந்தன், சோழ தேசத்தில் காற்றை விட வேகமாக புரவியை செலுத்துவதில் சக்கிரவர்தியாக திகழ்ந்தான் என்று சோழ தேசமே செல்லும். வெண்நிற தோற்றத்தில் கம்பிரமான உடல் தேகமும், பார்ப்பவர்கள் இவரது அகவை நாற்பதிஆறு என்று சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள், சிவப்பு நிற பட்டுவேட்டியும், இடுப்பில் பளபளப்பான வெள்ளி நிற உடைவாளும், அதன் அருகில் அரசரின் ஒலைசுவடியும், கழுத்தில் பெரிய சங்கலியும், கையில் மன்னரின் முத்திரை மோதிரமும். சிவப்பு நிற தலைப்பாவில் நடுவில் தங்கத்திலான புலியின் சின்னமும், இவரது உடையும், நடையும் பார்ப்பவர்களுக்கு இவர் தூதவர் என்றால் யாரும் நம்ம மாட்டார்கள். ஆனால் இன்று இரண்டாம் முறையாக சோழ மக்களின் நாயகனாக திகழ்ந்த வல்லவராயன் வந்திய தேவனிடம் இருந்து தூது செய்தியை மாமன்னர் ராஜேந்திரனிடம் கொண்டு செல்ல மலைகளின் தீவான மலேயா என்று அன்று அழைக்கப்பட்ட மலேசியா தீவை நோக்கி பயணிக்க மாமல்லிபுரத்தில் புறப்பட தயராக இருக்கும் சீனா செல்லும் சோழர்கள் கப்பலை பிடிக்க தான் வேகமாக புரவியை செலுத்துகிறான்.

சிவகந்தன் தூதவன், சோழ தேசத்து குலவிளக்கான குந்தவையின் ஆஸ்தான குடந்தை ஜோதிடர் சண்முக அய்யங்காரின் ஒரே மகனும், சோழ தேசத்து மக்களின் குலவிளக்கான குந்தவை பிராட்டியின் வளர்ப்பு கண்காணிக்கப்பட்டவர் தான் சிவகந்தன். தொடர்ந்து ஜந்து மணி நேரம் புரவியை செலுத்திய களைப்பால், புரவியின் வேகம் சுற்று குறைந்து கொண்டே வந்தது. தாகமும், பசியும் கண்களை சொக்கியது சிவகந்தனுக்கு, தூரத்தில் கோட்டையின் உச்சியில் இருக்கும் புலி கொடியை கண்டுவிட்ட சிவகந்தன். இன்னும் ஏழு கல் தொலைவு தான் இருக்கும் காஞ்சியை சென்று அடைய, என்று சொல்லிகொண்டே மீண்டும் தன் புரவியை காஞ்சியை நோக்கி செலுத்தினான்.
இன்னும் ஏழு (நாள்)கல்(ள்) தான். சிவகந்தனின் தூது கடல் கடந்த பயணம் தொடரும்...

இதன் இரண்டாம் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...