திங்கள், 2 ஜூன், 2014

குந்தவை ராஜ்ஜியம் 5

குந்தவை ராஜ்ஜியம் 5

இதற்கு முந்தைய தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

சிவகந்தனையும், பழனிவேல்ராஜனையும் அழைத்து கொண்டு மாடமாளிகை நோக்கி விரைந்தான் புகழேந்தி, அங்கு தலைமை சிற்பி எழில்ரசன் அரியனையில் அமர்ந்து காத்துகொண்டு இருந்தார்.
சிவகந்தனை கண்ட எழில்ரசன், அரியணையை விட்டு எழுந்து தன் வந்தனத்தை கூற, சிவகந்தனும் பதில் வணக்கத்தை கூறி மூவரும் அவரவர், அவரவர் ஆசனத்தில் அமர்ந்தனர்.

தொண்டையை கனைத்து கொண்டு அரம்பித்தார் தலைமை சிற்பி எழிலரசன், "வந்தியத்தேவரின் அன்பிற்கு பாத்திரமானவரே, தங்கள் என்னை சந்திக்கவேண்டிய நோக்கத்தை அறியலாமா?"
"கண்டிப்பாக எழிலரசன் அவர்களே, தங்கள் புதுப்பித்து கொண்டு இருக்கும் பொன் அரண்மனை பணியை நிறுத்திவிட வேண்டும், தச்சை நகரில் இருக்கும் மகான் குச்சரமல்லரை சந்திக்கவேண்டும், உங்களுக்கு மகத்தான பணி காத்து இருக்கிறது.."

சிவகந்தன் சொன்ன மறு கணமே, நெருப்பை மதித்து போல அரியனையை விட்டு துள்ளி எழுந்தான் எழிலரசன் கத்த அரம்பித்தான்.
"என்ன சொல்லுகிறர்கள் சிவகந்தன் அவர்களே, நம் வேந்தன் ராஜேந்திர சோழன் எனக்கு இட்ட கட்டளையை நிறுத்த சொல்கிறீர்களா? அவரது கட்டளையை தடுக்கும் அதிகாரம் இந்த சோழ தேசத்தில் யாருக்கு உண்டு?" என்று சொல்லி தனது சினத்தை வெளிப்படுத்த, புன்சிரிப்பை வெளிப்படுத்தி சிவகந்தன் பேச அரம்பித்தான்,

"என் சினம் அடைகிறீர்கள் எழில்ரசன் அவர்களே, இந்த உத்திரவை பிறப்பிட்டது எங்கள் தலைவர் வல்லவராயன் வந்தியத்தேவன்.. கட்டளை இட்டது.." என்று சொல்வதற்கு முன் இடைமறித்து,
"சிவகந்தன் அவர்களே!, நான் சினம் கொள்ளவில்லை, ஆச்சம் தான் அடைகிறேன், நமது மன்னரின் சினத்தை அறிவீர்கள் அல்லவா, அவரது சினத்தை எதிர்கொள்ளும் தைரியம் வையகத்தில் யாருக்கு உண்டு? ஏன் மறைந்த நமது மன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜ அருள்மொழி தேவருக்கே அந்த தைரியம் இல்லை, வல்லவராயன் வந்தியத்தேவர் மீது நமது மன்னர் அதிக அன்பு உடையவர் நமது மன்னர், ஆனால் அவரது ஆசைக்கு குறுக்கே யார் வந்தாலும் தகர்ப்பவர் என்பதை நீங்கள் அறீவீர்கள்?. நமது மன்னர் எனக்கு இட்ட கட்டளையை நான் மீறினால், நான் என்ன ஆவேன்?" என்று தன் அதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நமது மன்னர் அதிக சினம் உடையவர், அவரது சினத்தை மட்டும் அல்ல, அவரை போல அதிகம் சினம் உடையவராக இருந்த நமது மன்னரின் பெரிய தந்தை ஆதித்ய கரிகாலன் சினத்தையே சமாளித்தவள் என் தாய் குந்தவைப்பிராட்டி, உங்களுக்கு தெரியுமா? இந்த பொன் அரண்மனையில் வாசம் செய்ய இராஜேந்திர சோழன் ஆசை படகாரணம், அவரது பெரியதந்தை ஆதித்ய கரிகாலன் கட்டிய இந்த அரண்மனையில் தான் அவரது தாத்தா அழகு வாயந்த சுந்திர சோழன் கடைசி காலம் முழுவதும் வாசம் செய்த இந்த அரண்மனையில் தானும் வசிக்க ஆசைபடுவதும் தெரியும். ஆனால் இந்த அரண்மனையில் இராஜேந்திர சோழன் ஒருகணம் செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்து எங்கள் தாய் குந்தவைப்பிராட்டி, அவரது கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நமது மன்னர் மட்டும் அல்ல, அவரது தந்தைக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த சோழ தேசத்துக்கே தெரியும், இக்கோட்டையில் புதுப்பிக்ககூடாது என்று கட்டளையிட்டது என் தாய், ஆணை பிறப்பித்து என் தலைவர் வந்தியத்தேவர்,"
[காஞ்சிபுரத்தில் அதித்ய கரிகாலன் தன் தந்தைக்கு கட்டிய அரண்மனையிலே வாசம் செய்து, சுந்திர சோழர் மரணத்தால் "பொன் மாளிகை துஞ்சின தேவன்" என மக்களால் அழைக்கப்பட்டார்.]
"தாய் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், ஆனால் எந்த காரணத்திற்காக நமது மன்னர் இந்த அரண்மனையில் தங்க கூடாது என்று என் சொன்னார்கள் என்பதை நான் அறிந்துகொள்ளலாமா சிவகந்தன் அவர்களே?"
"கண்டிப்பாக அறிந்து கொள்ளலாம், என் தாய் செய்யும் ஒவ்வொறு செயலிலும் ஒர் அர்த்தம் இருக்கும்!, இதிலும் ஒர் அர்த்தம் இருக்கிறது பொன் அரண்மனையில் தங்கினால் நமது மன்னர் இராஜேந்திர சோழனுக்கு அபத்து ஏற்படும் என ஆச்சம் அடைகிறார்,"
இதுவரை நடந்த விவாதத்தை அரியனையில் அமர்ந்து கவணித்து வந்த காஞ்சி படைதளபதி பழனிவேல் மாறன் தன் இரு புஜத்தை மடக்கி கொண்டு பேச அரம்பித்தார்," அய்யனே!, தங்கள் என் கூறுகிறர்கள், இந்த காஞ்சி நகரில் இருந்தால் நமது மன்னருக்கு அபத்தா? என்ன சொல்கிறர்கள், வேள்ளார்களும் பழுவூர்காரர்களும் இருபுறம் இருந்து காக்கும் இந்த கோட்டையில் தங்கினால் பகைவரால் அபத்து ஏற்படும் என எப்படி சொல்வீர்கள் அய்யனே?" என சிவகந்தனை நோக்கி மடை திறந்த வெள்ளம் போல பேச அரம்பித்தார்.
"காஞ்சி நகரில் எதிரிகள் வர முடியாத பாதுகாப்பான நகரம், தங்கள் காவலில் இருக்கும் போது என்ன கவலை, காஞ்சி நகரில் மன்னர் வசிப்பதில் என் தாய் எந்த தடையும் சொல்லவில்லை, பொன் அரண்மனையில் வாசம் செய்வதை தான் தடுத்து இருக்கிறார்கள்."

"என் என்று நமது தலைமை சிற்பிக்கே தெரியும்?" என்று சிவகந்தன் கூற,
"எனக்கு என்ன தெரியும் சிவகந்தா?"
"பொன் அரண்மனையில் வாசம் செய்பவர் யார் எழிலரசன் அவர்களே?"
"கடவுள் வாசம் செய்யும் இடம்."
"அப்படி என்றால், மனிதர்கள் பொன் அரண்மனையில் வசித்தால்?"
"அமரர்..." என பேசவந்ததை நிறுத்திகொண்டார் எழிலரசன்,
"நீங்கள் சொல்லவந்தீர்கள் அல்லவா, அந்த ஒரு காராணத்திற்காக தான் என் தாய் இந்த பொன் அரண்மனையில் வசிக்க அனுமதிக்கவில்லை, ஏற்கனவே தன் தமையன் இளவரசர் அதித்ய கரிகாலன் இளம் வயதிலே கொலை செய்ய காரணமாக இந்த அரண்மனையை கருதுகிறார், அவரது தந்தையும் இங்கு வசித்து மரணம் அடைந்தால், இந்த அரண்மனையில் வாசம் செய்ய ராஜராஜசோழனுக்கு மட்டும் அல்லாமல், தனது மருமகன் ராஜேந்திர சோழனுக்கும் கட்டளையிட்டு இருக்கிறார், அந்த செய்தியையும் சொல்லவே நான் மலேயா தீவிற்கு சொல்லுகிறேன்."

"பழனிவேல் ராஜன் அவர்களே, நான் சோழ தேசத்து அரசி பஞ்சவன்மாகதேவியை சந்திக்க சித்தமாக இருக்கிறேன், அவரிடம் சொல்லி விடுங்கள், நான் வந்த காரணத்தை, அவரிடம் இருந்தும் பொன் அரண்மனையில் நமது மன்னர் இராஜேந்திர சோழன் தங்க கூடாது என்று ஒலை சுவடி பெறவேண்டும், அவரது வார்த்தைகளுக்கு தான் ராஜேந்திர சோழன் செவி சாய்ப்பார், நான் இங்கு வந்த இரண்டாவது நோக்கும் இது தான், சிக்கிரமாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள், இன்று இரவு என் பயணத்தை அரம்பிக்கவேண்டும்."
யார் அந்த பஞ்சவன்மகாதேவி? சோழ தேசத்து குலதெய்வமாக கருதப்பட்ட குந்தவைப்பிராட்டிக்கு நிகராக ராஜேந்திர சோழன் அன்பிற்கு பாத்திரமான அந்த பெண் யார் என்பதை அடுத்த வாரம் காணலாம்,
 Panchavan Maadeviyar queen of Mummudichola…..(Rajaraja – 1)…
(அவரை பற்றிய ஒரு செய்தியை இங்கு சொல்கிறேன், இளம் வயதில் பஞ்சவன்மகாதேவி தாசியாக இருந்தார், இன்று ராஜராஜசோழனை மட்டும் அல்லாமல் ராஜேந்திரசோழன். தன் அன்பால் கட்டிபோட்ட அந்த பெண் பற்றிய தகவலை அடுத்த வாரம் அறியலாம்.)
இன்று நித்திரையில் சிவகந்தன் பயணம் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக