திங்கள், 21 ஏப்ரல், 2014

குந்தவை ராஜ்ஜியம் 2

குந்தவை ராஜ்ஜியம் 2



இதன் முதல் தொடரை காண இங்கே <<கிளக்>> செய்யுங்கள்...

குடந்தையில் இருந்து நள்ளிரவில் இருந்து பயணத்தை தொடங்கிய சிவகந்தன், சுட்டு எரிக்கும் சூரியனின் உச்சியில் நிற்க பசி தாகத்தில் இருந்த சிவகந்தனுக்கு காஞ்சி கோட்டையில் உச்சியில் இருந்த புலி கொடியை கண்டதும் காஞ்சியை நோக்கி தன் புரவி(குதிரை)யை செலுத்த அரம்பித்துவிட்டான்.


"அதோ காஞ்சியின் கோட்டை, இங்கு ஒய்வு எடுத்துவிட்டு கடல் பயணத்திற்கு தேவையான பொருள்களை பெற்றுவிட்டு மாமல்லிபுரத்திற்கு  செல்வோம், இன்னும் இரண்டு திங்கள்(நாள்) தான் இருக்கிறது. மாமல்லிபுரத்தில்  இருந்து மலேயா(தற்போதைய) தீவிற்கு சோழ தேசத்து போர் கப்பலை பிடிக்க." என மனதில் சிந்தித்துகொண்டே தன் புரவியை செலுத்த அரம்பித்தான் சிவ கந்தன்.

[காஞ்சி நகரம் சரித்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம், பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய இந்த நகரில் தான் சீனா சென்று சீனர்களின் மனதை வென்ற அவர்களின் இதயத்தில் கூடி இருக்கும் பல்லவ இளவரசர் போதி தர்மர் பிறந்தார்,

பல்லவர்களால் காஞ்சி நகரம் சிற்ப கலை சிறந்து விளங்கிய இந்த நகரம். இன்று சோழ தேசத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிவிட்டது.]

காஞ்சி நகரத்தின் கோட்டை வாசலில் உள்ள பார்வை கோபுரத்தில் இரு இளைஞர்கள் நின்று கொண்டு காவல் காத்து கொண்டு இருந்தனர்.

மலயுத்த வீரர்களை போன்று வலிமையான தேகத்துடன் அந்த இளம் இளைஞனுக்கு தற்போது தான் சிறியதாக அரும்பு மீசை முளைத்து இருந்து, காஞ்சி தேசத்து உப.சோனாதிபதி பழனிவேல் ராஜனின் மகன் தான் அந்த மணிமாறன்.

ஏதையே சிந்தித்தாவறே சோகமாக இருந்த மணிமாறனை பார்த்து அவனுடன் கோட்டை பாதுகாப்பில் இருந்த புகழேந்தி,
மணிமாறனை பார்த்து,
"என்ன மணி, ஏதையோ சிந்தித்து கொண்டு இருப்பது போல தெரிகிறது, உன் முகத்தில் பழைய பொலிவே இல்லையே, என் உடம்பு எதும் சரியில்லையா?"

"என் உடம்பு திடமாக வலிமையாக தானே இருக்கிறது புகழ், என் கவலை எல்லாம் மலேயா தீவில் இருக்கும் நம் சோழ தேசத்து வீரர்களை பற்றி தான்."

"ஹா ஹா ஹா" என பலமாக சிரித்த புகழ் " உன் பதில் என் வயிற்றை புண்ணாக்கிறது, நம் மன்னரும், நம் படையும் சாதராண படையா? இவ்வுலகத்தையே வெல்லும் அற்றல் நம் மன்னர் ராஜேந்திரனுக்கு இருக்கிறதை அறியவில்லை,"

"அய்யகோ, நான் அப்படி சொல்லவில்லை, நம் மன்னரும் நம் நாட்டு வீரர்களின் வீரமும் பற்றி பேசி கொண்டே இருக்கலாம், நம் மன்னர் இமயத்தில் இருந்து வரும் கங்கை நதி பாயும் வங்கம் வரை ராஜ்ஜியத்தை விரிவு படுத்திய மாவீரர் அல்லவா அவர்?"

"அப்ப என் சோகமா இருக்கிறாய் மணி"

"மலேயா தீவில் இருக்கும் நம் படையை நினைத்து தான்......" என்று மணிமாறன் வார்த்தையை முடிப்பதற்கு முன் புகழேந்தி கத்த அரம்பித்துவிட்டான்.

"மணி உனக்கு தான் நன்கு தெரியுமே நம் பரதர்களின் வலிமையை பற்றி, அங்கு தான் பாலகன் பருவத்தில் வளர்ந்தாய், மீன் பிடிப்பதை மறந்து வாள் பிடிக்க கற்று கொடுத்தவர் தானே, நம் மன்னர், வலிமையான ஈழத்தையும், கடாரத்தையும் வென்று விட்டார், சிறிய மலை தீவான மலேயா(சிங்கப்பூர் &மலேசியா) இன்னும் சில திங்களில்(நாளில்) சோழதேசத்துடன் இனைந்துவிடும், உனக்கு என்ன கவலை?."

அதுவரை அமைதியாக இருந்த மணிமாறனை, புகழேந்தியின் மீது தன் கோபத்தை வெளிகாட்டினார்.
"என்னை பேசவிடாமல், நீயே உன் கற்பனையில் நினைப்பதை பேசினால் என்ன அர்த்தம்?, என் சோகம் அது அல்ல, நான் நினைத்து என்னை பற்றி, உனக்கு ஒன்று தெரியுமா??. நம் மன்னர் ராஜேந்திரனுக்கு முன்பே,  மறைந்த நம்முடைய மாமன்னர் ராஜராஜசோழன் அருள் மொழிவர்மர் அவர்களே அன்றே செய்த ஏற்பாடால் தான். இன்று நம்முடைய மாமன்னர் ராஜேந்திரன் சோழனால் எளிதாக பல தேசங்களை வெல்ல முடிந்தது, மீன் பிடிக்கும் பரதர்களுக்கு வாளும், வேலும் பயிற்ச்சியை அன்றே அளித்துவிட்டார், பரதர்களுடன் சிறுவயதிலே வளர்ந்தது மட்டும் அல்ல, அவர்களுடன் சேர்ந்து எடுத்த பயிற்ச்சியின் விளைவு தான் என் வலிமையான தேகம் உருவாக காரணம்."

"சரி உன் கவலை தான் என்ன மணிமாறா? உன்னை பற்றி என்று சொன்னாயே, அப்படி என் கவலை?"
"புகழ், நீ நன்கு அறிவாய், நான் உருவாக்கிய வலிமையான தேகம், போர்களத்தில் எதிரிகளின் தலையை சாய்க்கவே, ஆனால் எனக்கு இன்னும் பதினேட்டு அகவை பூர்த்தியாகவில்லை என்ற காரணத்தால், என் தந்தை என் போர்களத்தில் அனுமதிக்கவில்லை, நம் மன்னரே இன்னும் இரண்டு வருடங்களில் கீழ்தேசத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் கைபற்றி நாடு திரும்பி ஆட்சி பொறுப்பில் ஈடுபட அரம்பித்துவிடுவார். அப்படி என்றால், தற்பொது மலேயா தீவில் இருக்கும் நம் படையுடன் நான் தற்போது இனைந்தால் மட்டுமே, என்னால் போர்களத்தில் ஈடுபட்டு எதிரிகளின் குருதி(இரத்தம்) சிந்த வைக்க முடியும், நான் எப்படி நம் மன்னர் படையுடன் இனைவது எப்படி கடல் கடந்து இருக்கும் அந்த தீவிற்கு செல்வது, என் தந்தையுடன் எப்படி சம்பந்தம் வாங்குவது என பல கவலைகளால் தான், நான் வாடி இருக்கிறேன் நண்பா,"


"கவலைபடாதே மணிமாறா!, உன் கவலையை போக்க ஆண்டவனே ஆள் அனுப்பாவார், உன் ஆசை நிறைவேறா."

"அப்படி நடந்தால், மகிழ்ச்சி, என் அவலும் லச்சியமும் அது தான் புகழ்."

புகழேந்தி மாலுமிகள் பயண்படுத்தும் தொலைநோக்கி முலம் தூரத்தில் இருந்து யாராவது வருகிறார்களா என கண்காணித்தான். அந்த நேரத்தில்.

"மணி மாறா, அங்கே பார், புழுதி புயல் உருவாக்கி கொண்டு வேகமாக ஒரு புரவி வருவதை பார், வருபவர் யார் என்று தெரிகிறதா உனக்கு?"

மணிமாறன் தொலைநோக்கியை வாங்கி தூரத்தில் வருபவரை நோக்கி பார்வையை செலுத்தியவன் முகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது, பகலவனை கண்டு பூக்கள் மலர்வது போல மலர அரம்பித்துவிட்டது மணிமாறன் முகம்,

"புகழ், என் லஞ்சியம் வீண் போகவில்லை, என் ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைக்கபோகிறது. அதே அந்த புரவியில் வருபவர் மூலமாய்" என்று சொல்லிக்கொண்டே பார்வை கோபுரத்தை விட்டு கீழே இறங்கி கோட்டை வாயில் நோக்கி விரைந்தான் மணிமாறன்.

[மணிமாறன் ஆசை நிறைவேறியதா இல்லையா?. புரவியில் வந்தவர் நிறைவேற்றுவார இல்லையா? என்பதை ஏழு திங்கள் வரை காத்திருங்கள்.,]

குந்தவை ராஜ்ஜியம் 3


2 கருத்துகள்:

  1. அருமை வணக்கம் இந்த நாவல் முழுமையாக படிக்க விருப்பம் அது பற்றி தெரிவித்தால் நல்லதுநன்றி 🙏

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு தொடரை படிக்க ஆவலுடன் உள்ளேன் மேலும் பதிவுகளை வெளியிடவும் நன்றி

    பதிலளிநீக்கு